பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 13 பேரும் பிணையில் விடுதலை | Virakesari.lk
(எம்.மனோசித்ரா)
பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது , பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறியதாகக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட 13 பேர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் , யுவதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதையடுத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் பாராளுமன்ற சுற்றுவட்டம் முற்றுகையிடப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. பெருந்திரளான மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அமர்ந்திருந்த நிலையில், பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த 13 பேரும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Share this news on your Fb,Twitter and Whatsapp
Times News Network:Latest News Headlines
Times News Network||Health||New York||USA News||Technology||World News